யாழில் இடம்பெற்ற அதிசய நிகழ்வு!
யாழ் வடமராட்சி, உடுப்பிட்டி இலக்கணாவத்தை பகுதியில் பசு ஒன்று மூன்று கன்றுகளை ஈன்ற அரிய நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியில் விவசாயி ஒருவர் விலங்கு வேளாண்மையில் ஈடுபட்டு வருகின்றார். இவ் விவசாயியின் பசு மாடு நேற்று முன் தினம் (07) மூன்று கன்றுகளை ஈன்றுள்ளது.
இரு நாம்பன் பசுக்கன்று ஈன்றுள்ளதும் இலங்கையிலேயே முதன்முறையாக இருக்கலாம் என அந்த விவசாயி மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
இந்த நிலையில், மூன்று கன்றுகுட்டிகளும் ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.