இலங்கையில் தங்கம் வாங்க காத்திருப்போருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி! வரலாறு காணாத வகையில் உச்சந் தொட்ட தங்க விலை
உலக சந்தையில் ஏற்பட்ட தங்க விலை அதிகரிப்பை அடுத்து, இலங்கையிலும் தங்கத்தின் விலையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இன்று (11) 31,200 அமெரிக்க டொலர்களை (900,000 ரூபாய்க்கு மேல்) தாண்டியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இவ்வாறு தங்கத்தின் விலை அதிகரிப்பது இதுவே முதல் முறை என்று நம்பப்படுகிறது. சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தகப் போரின் விளைவாக தங்கத்தின் விலை உயர்ந்து வருகின்றது என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. முதலீட்டாளர்கள் தங்க இருப்புகளுக்கு முன்னுரிமை அளித்து, பாதுகாப்பான சொத்துக்களுக்கு மாறுவதால் தங்கத்தின் விலை அதிகரித்து வருகின்றது.
கொழும்பு தங்கச் சந்தை இன்று (11) அறிவித்துள்ள தங்க விலை விபரங்களின்படி, 22 கெரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 235,500 ரூபாயாக உள்ளது. மேலும், 24 கெரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 256,000 ரூபாயாக அதிகரித்துள்ளது.