நாட்டின் பல பகுதிகளில் இடி மின்னல் தாக்கம்; விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!

இலங்கையின் சில பகுதிகளில் மலைவேளையில் பலத்த மின்னல் ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று (07.04.2025) பிற்பகல் 02.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை இன்று இரவு 11.00 மணி வரை செல்லுபடியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கமைய, சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு மற்றும் பலத்த மின்னலுடன் மழை பெய்யும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. 

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அந்தப் பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. 

மின்னல் அபாயங்களைக் குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களை அறிவுறுத்தப்பட்டுள்ளது.