நாட்டில் இன்று இடம்பெற்ற விபத்து; சாரதி உட்பட இருவர் வைத்தியசாலையில் அனுமதி
அநுராதபுரம் மாவட்டம், அம்பன்பொல பிரதேசத்தில் இன்று (ஏப்ரல் 24) காலை பாடசாலை ஒன்றிற்கு அருகில் இடம்பெற்ற சாலை விபத்தில் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தனியார் பஸ் ஒன்று முச்சக்கரவண்டியுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் முச்சக்கரவண்டி சாரதி மற்றும் பின்னால் பயணித்த ஒருவர் காயமடைந்த நிலையில், உடனடியாக அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக அம்பன்பொல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.