அரசாங்க ஊழியர்களுக்கான விடுமுறைகள் இரத்து தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
உள்ளூராட்சித் தேர்தல் முடியும் வரை அரசாங்க அச்சக அலுவலகத்தின் அனைத்து ஊழியர்களின் விடுமுறையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. உள்ளூராட்சித் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகளுக்காக அதிகாரிகள் 24 மணி நேரமும் விழிப்புடன் இருக்க வேண்டும் என இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அச்சு அலுவலக இயக்குநர் தெரிவித்துள்ளார்.
மேலும், அரசாங்க அச்சக அலுவலகத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அச்சக அலுவலகத்திற்கு வெளியே பாதுகாப்பை வழங்குவதற்காக, பொலிஸ் சிறப்பு அதிரடிப் படை நடமாடும் ரோந்துகள் மேற்கொண்டு வருகின்றன.
இத்துடன், உள்ளூராட்சித் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணி நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், அரசாங்க அச்சு துறையில் 1,200 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.