தாய்லாந்து மற்றும் மியன்மாரில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!
தாய்லாந்தின் பாங்கொக் நகரில் இன்று (28) வெள்ளிக்கிழமை 7.3 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தாய்லாந்திலும் உயரமான பல கட்டிடங்களில் இருந்து மக்கள் அச்சத்துடன் வெளியே ஓடுவதற்கான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இந்நிலநடுக்கம் நண்பகல் ஏற்பட்டதாகவும், தற்போது வரை எவ்வித உயிரிழப்புகளும் மற்றும் சேதங்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மியன்மாரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவில் 7.7 ஆக பதிவாகி, வெள்ளிக்கிழமை மதியம் 12:50 மணியளவில் (06:20 GMT) மியன்மாரின் சகாயிங் நகரிலிருந்து வடமேற்கே 16 கிமீ தொலைவில், 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அலறியடித்துக்கொண்டு வீதிகளில் தஞ்சம் இடைந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், பல கட்டடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மியான்மாரில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் பலத்த சேதம் ஏற்பட்டு இருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.