அதிகரிக்கும் வெப்பநிலை தொடர்பில் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
நாட்டில் தற்போது நிலவும் வெப்பமான வானிலை குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் மேல், வடக்கு, வடமத்திய, சப்ரகமுவ, தென், வடமேல் மாகாணங்களுடன், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில பகுதிகளில் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில் நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், குறிப்பிட்ட பகுதிகளில் வெப்பநிலை 39° செல்சியஸ் முதல் 45° செல்சியஸ் வரை பதிவாகக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், வெளிப்புறங்களில் வேலை செய்யும் பொது, மக்கள் லேசான ஆடைகளை அணிந்து, நிழலான பகுதிகளில் ஓய்வு எடுக்கவும், போதிய அளவு நீரை அருந்தவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அதேபோல், அதிக வெப்பத்தால் ஏற்படக்கூடிய சுகாதார பிரச்சினைகள் குறித்து அவதானம் செலுத்தவும், சரியான சுகாதார நடைமுறைகளை பின்பற்றவும் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:
இலங்கை