உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் திகதி தொடர்பில் வெளியான அறிவிப்பு

 

எதிர்வரும் மே மாதம் 06 ஆம் திகதி, 2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 

மேலும், இன்று (20) பிற்பகல் 12 மணி வரை  உள்ளூராட்சி அதிகார சபைத் தேர்தல் தொடர்பான வேட்பு மனுக்கள்  ஏற்றுக்கொள்ளப்பட்டது. 

அதேசமயம், இன்று (20) பிற்பகல் 1.30 மணியுடன் ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய வழங்கப்பட்ட கால அவகாசம்  நிறைவடைந்ததையடுத்து, இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.