க.பொ.த. உயர்தர பெறுபேறுகள் வெளிவாவது தொடர்பில் முக்கிய அறிவிப்பு!
கடந்த 2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தர பரீட்சைகளின் பெறுபேறுகள் தொடர்பாக அண்மைக்காலமாக பரவி வரும் தகவல்கள் குறித்து பரீட்சைகள் திணைக்களம் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், க.பொ.த. உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் தொடர்பில் சமீபத்தில் சமூக ஊடகங்களில் பல தகவல்கள் பரவி வந்துள்ளன என குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளதன் படி, இதுவரை க.பொ.த. உயர்தர பரீட்சைகளின் பெறுபேறுகளை வெளியிடுவது தொடர்பில் எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
இதன்படி, சமூக ஊடகங்களில் பரவி வரும் போலியான தகவல்களினால் மாணவர்கள் குழப்பமடையாமல் இருக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
Tags:
இலங்கை