இன்று வெளியாகிய மீள்திருத்தம் செய்யப்பட்ட புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள்

 

கடந்த 2024 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் மீளத் திருத்தம் செய்யப்பட்ட பெறுபேறுகள் இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ளன. பாடசாலைகளுக்கு இவ்வாறு திருத்தம் செய்யப்பட்ட புள்ளிகளின் அடிப்படையில்  விண்ணப்பிக்க வேண்டிய நிலை வந்துள்ளது. 

பாடசாலைகளின் அதிபர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள  விண்ணப்பப் படிவத்தை பெற்றோர், அந்த விண்ணப்பப் படிவத்தை தங்கள் பள்ளி அதிபரிடமிருந்து பெற்று, அதை முறையாக பூரணப்படுத்தி அதிபரிடம் மீண்டும் சமர்ப்பிக்க வேண்டும்.

இந்நிலையில், எதிர்வரும் 25 ஆம் திகதிக்கு முன்னர்  பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப் படிவங்கள்,  அதிபரிடமிருந்து நிகழ்நிலை முறையில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.