யாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!

 

யாழ்ப்பாணக் குடாநாட்டில் வெப்பநிலை அதிகரித்துள்ளதையடுத்து, மக்கள் உடல் வெப்பத்தை தணிக்க கூடிய நீராகாரங்களை அதிகமாக அருந்த வேண்டும் என யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய உதவி பணிப்பாளர் என். சூரியராஜா அறிவுறுத்தியுள்ளார். 

குறித்த விடயத்தை நேற்று (26.03.2025) யாழ். ஊடக அமையத்தில் அவர் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.  

மேலும், வங்காள விரிகுடாவில் எதிர்வரும் ஏப்ரல் 3ஆம் திகதி காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதாகவும், இதனால் ஏப்ரல் 3ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை வடக்கு கிழக்கில் மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்க வாய்ப்புள்ளதாக நா. பிரதீபராஜா தெரிவித்தார்.

வங்காள விரிகுடாவில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு மையம் 5ஆம் திகதியளவில் தாழமுக்கமாக வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், அதன் நகர்வு பாதையும் கரையை கடக்கும் இடம் குறித்து அடுத்த சில நாட்களில் உறுதிப்படுத்த முடியும்.

இந்த தாழமுக்கம் காரணமாக, எதிர்வரும் ஏப்ரல் 3ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை வடக்கு கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளிலும் மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

சிறுபோக நெற்செய்கைக்கான ஆரம்ப நடவடிக்கைகளில் ஈடுபடும் விவசாயிகள் இதனை கருத்தில் கொண்டு செயல்படுவது சிறந்தது. அதேபோல், எதிர்வரும் ஏப்ரல் 5ஆம் திகதி முதல் 09ஆம் திகதி வரை, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதால் கடற்றொழிலாளர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என நா. பிரதீபராஜா அறிவுறுத்தினார்.