இன்று 100 100 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் அரிய சூரிய கிரகணம்
2025 ஆம் ஆண்டில் மொத்தம் இரு சூரிய கிரகணங்கள் ஏற்படவுள்ள நிலையில், இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று (29 மார்ச் 2025) நிகழவுள்ளது. இது ஒரு அரிய நிகழ்வாக கருதப்படுகிறது. 100 ஆண்டுகளுக்கு பிறகு இவ்வாறு இரண்டு சூரிய கிரகணங்கள் ஏற்படுகின்றன என வானியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சூரிய கிரகணம் என்பது சூரியன், பூமி மற்றும் நிலவு தங்களின் வரிசையில் அமைக்கப்பட்டு சூரியன் முழுமையாக அல்லது பகுதி நேரமாக நிலவினால் மறைக்கப்படும் போது நிகழ்கிறது. இதனால், சூரியனின் ஒளி பூமியில் படாமல் சில நிமிடங்களுக்கு இருட்டு ஏற்படுகிறது.
இந்நிலையில், இந்த ஆண்டு முதல் சூரிய கிரகணம் ஆசியாவின் சில பகுதிகள், ஆப்பிரிக்கா, ஐரோப்பா, அட்லாண்டிக் பெருங்கடல், ஆர்டிக் பெருங்கடல், வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்காவிலிருந்து காணப்படுகிறது. அமெரிக்காவில், அதிகாலை நேரத்தில் சூரிய உதயத்துடன் இது ஏற்படும் எனவே அதன் தாக்கம் சரியாக தெரியவில்லை.
இந்த கிரகணம் அரிதானது மற்றும் பலர் அதை நேரில் பார்க்க ஆவலாக உள்ளனர்.